Tuesday, December 27, 2016

கொசுவை விரட்ட,கொசுவை ஒழிக்க


கொசுவ விரட்ட! – கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி!
இயற்கை கொசு விரட்டி! mosquito control! இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட!
 
ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும். ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!
தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!
 
கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள்.  வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? தெரியுமா உங்களுக்கு!
அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!

நொச்சி இலை மிகச் சிறந்த கொசுவிரட்டி. பேய்துளசி, காட்டுத்துளசி ஆகியவையும் கொசுக்களை அப்புறப்படுத்த உதவும். இவற்றைத் தூளாக்கி, மாலைப் பொழுதில் சாம்பிராணி புகைபோடுவதுபோல தீயிலிட்டு வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பின்னர் பூண்டு எண்ணெய், நீரைச் சேர்த்து வீட்டின் ஜன்னல்களில் தடவி, கதவைப் பூட்டிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது.இதேபோல புதினா, கேந்தி ஆகிய செடிகளைத் தொட்டியில் வளர்த்து அவற்றை மாலை நேரங்களில் ஜன்னல்களின் அருகே வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது. அழகுச் செடிகளாகக் கருதப்படும் ஏஜ்ரேடம், ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா உள்ளிட்டவை மட்டுமன்றி எளிதாகக் கிடைக்கும் வேப்பிலையும்சிறந்த கொசுவிரட்டி. மேலும் சில கொசுக்களை விரட்டும் செடிகள் கீழே

ஏஜ்ரேடம் (Ageratum)

வெள்ளை நிறமும் ரோஜா நிறமும் கலந்து கவர்ச்சியாக காட்சி தரும் இந்த பூச்செடி உண்மையில் காக்கா வலிப்புக்கும், காயங்களுக்கும் அருமருந்து. வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்கள், கொசு விரட்டிகளை உற்பத்தி செய்பவர்கள் அதற்காக இதன் எசென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சில வகையான கொசுவத்திகள் எரியும்போது சிலருக்கு தோலில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படுகிறது.

யூகிலிப்டஸ் (Eucalyptus)

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

மாரிகோல்ட் (Marigold)

மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

புதினா (Mint)

டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல்கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

ரோஸ்மேரி (Rosemary)

இது ஒரு பசுமை மாறாத செடி. நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயையும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயையும் கலந்து அந்தக் கலவையை உடலில் தேய்த்தால் கொசு நெருங்காது. இந்தக் கலவையை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதாக வளரக்கூடிய இயற்கைச் செடி.

சிட்ரோநெல்லா (Citronella – Lemongrass)

சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப் பிரபலமான ஓர் இயற்கை பூச்சி விரட்டி. இதன் சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லாவைப் பயன்படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

பூண்டு (Garlic)

மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களைகொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

கொசுக்களை விரட்டும் செடிகள்!
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? இதோ கொசுவை விரட்ட எளிய வழி
கொசு ஓரு பிரச்சனையா? உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எழுமிச்சை பழம் எடுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். இப்பொழுது சதை பகுதியில் ஆங்காங்கே கிராம்பை சொருகுங்கள். இதை அப்படியே உங்கள் ரூமில் வைங்கள். இவைகளில் இருந்து வரும் வாசனை கொசுவை விரட்டோ விரட்டு என்று விரட்டிவிடும்.

கொசுவை ஓட ஓட விரட்டணுமா?

அப்படி என்றால் நீங்கள் வேப்ப மரத்து இலைகளை சுடு தணலில் வாட்டுங்கள். அதிலிருந்து வரக்கூடிய புகை கொசு கூட்டங்களை ஓட ஓட விரட்டும்

வடை போண்டா பஜ்ஜி செய்து சாப்பிடக்கூடிய அசோலா பாசியை வீட்டில் பின்னாடி வளர்த்து வந்தால் உங்கள் வீட்டு பக்கம்கொசு எட்டிகூட பார்க்காது.

டெங்கு கொசுவை ஒழிக்க எளிய வழி
 
டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க எளிய வழி!

2 லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். அப்புறம் கீழ் பாதியை எடுத்துக்கொண்டு அதில் அரைப்பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றுங்கள். அதில் முக்கால் கப் பிரவுன் சுகர் என்று சொல்லக்கூடிய பழுப்பு நிற கரும்பு சர்க்கைரையையும் ஒரு டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்டையும் சேர்த்து கலக்கவும். ( சீனி கூட பயன்படுத்தலாம்)
இப்பொழுது கீழ்பகுதி பாட்டிலின் மீது பாட்டிலின் மேல் பகுதியை தலைகீழாக வைக்கவும் (புணல் போல வைக்கவும்). இப்பொழுது இந்த பாட்டிலை சுற்றி கருப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும். அப்புறம் இந்த பாட்டிலை நமது ரூமில் ஒரு மூலையில் வைக்கவும். இந்த பாட்டிலிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளி வர ஆரம்பிக்கும். கொசுக்கள் எல்லாம் அங்க படை எடுக்கும். அந்த கரைசலில் கொசுக்கள் எல்லாம் ஒட்டிக்கொள்ளும். அவைகளால் இனி வெளியே வரமுடியமல் போய் அங்கேயே சமாதி அடைந்துவிடும்.


கொசுக்களைக் கலங்கடிக்கும் கற்பூர வில்லை!

கற்பூரம்… ஒரு கண்கண்ட கிருமி நாசினி. வீடுகளில் தினமும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை கொளுத்தி ஆரத்தி எடுப்போம். இதைச் செய்யும்போது அறையில் உள்ள காற்றின் மாசுக்கள், பேக்டீரியா, வைரஸ், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி அடிக்கின்றன கற்பூரப் புகையும் மணமும். சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக்கும் சக்தி கற்பூரத்துக்கு உண்டு. நிரூபிக்கப்பட்ட பல மருத்துவ குணங்கள் இதில்
அடங்கியிருக்கின்றன. மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு கற்பூரத் தைலம் கண்கண்ட மருந்து. பல வலி நிவாரண மசாஜ் க்ரீம்களுக்கு கற்பூரம் ஒரு இன்றியமையாத பொருள்.
நம்மில் பலருக்கு கற்பூரம் ஒரு சிறந்த கொசு நிவாரணி என்கிற உண்மையே தெரியாது. பக்க விளைவுகள் இல்லாத, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு அரு மருந்து. இதற்காக கற்பூரத்தை நாள் முழுவதும் எரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை .

கொசுக்களை ஒழிக்க சுலபமான மூன்று வழிகள்
1. கொசுவர்த்தி பேடில் வழக்கமாக வைக்கும் நீல நிற வில்லைக்கு பதில் கற்பூரத்தை தினமும் ஒரு மணி நேரம் – காலையிலும் மாலையிலும் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. இரண்டு வில்லை கற்பூரத்தை அறையின் மூலை முடுக்குகளில் – எங்கு கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ – அங்கு வைத்து விடவும். அந்த வில்லைகள் தாமாகக் கரையும். காற்றும் சுத்தமாகும். கொசுவும் இருக்காது.
3. இரவில் படுக்கை அறையில் ஒரு வாய் அகன்ற கப்பில் தண்ணீருடன் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு ஒரு மூலையில் வைத்து விடவும். கற்பூரம் தண்ணீரில் கரைந்து காற்றுடன் கலக்கும். கற்பூர மணத்துடன் கொசு இல்லா நிலையை அனுபவிக்கலாம்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி?
வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் மண்ணெனண்ணைய் தெளித்தால் கொசு முட்டை அழிவதோடு கொசுக்கள் முட்டையிடுவதும் நின்று போகுமாம். இதனால் கொசு உற்பத்தியே இல்லாமல் போகுமாம்!
வீட்டை சுற்றிலும் நீங்கள் துளசி, திருநீற்று பச்சிலை செடிகளை வளர்த்து வந்தால் கொசுக்கள் வருவது குறைந்து போகுமாம்.
வீட்டை சுற்றி இருக்கும் தண்ணீரில் லிட்டருக்கு ஒரு விதை வீதம் தேற்றான் கொட்டையை அரைத்து கலக்கலாம்! மஞ்சள் கிழங்கையும் அரைத்து தேங்கியிருக்கும் தண்ணீரில் கரைக்கலாம்

கொசுவை விரட்ட மூன்று வழிகள்! முத்தான வழிகள்! எளிய வழிகள்! அனைவருக்கும் ஏற்ற எளிய வழிகள்!
வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்…கொசு போயே போச்சே!

கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.
ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!
ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள்.  பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள். பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.  வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது


காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !
தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ : விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரிக்கலாம்!
இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது.
விற்பனை வாய்ப்பு
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.
வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.
வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.

உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

கொசு  விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.
பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான்கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப்
     கொசுக்களை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல நடவடிக்களை எடுத்தாலும் நாம் நம்மை சுற்றி உள்ளஇடத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ளவேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு பிறகு கொஞ்சம் மக்களிடையே விழிப்புணர்வு வந்து இருப்பதாக தெரிகிறது . வாளி , வர்ணம் இருந்த பாத்திரங்கள் , தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்த முடியவிட்டாலும் நீர் மீது டீசல் ,மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ஏதோவொன்று சிறிது தெளிக்கலாம் .இதுவும் அதிக செலவு என்று எண்ணுபவர்கள் சோப்பு தண்ணீரை பயன்படுத்தலாம் .கிணறு போன்ற நீர் நிலைகளில் என்ன செய்யலாம் ? அதற்கு  இயற்கை தந்த தீர்வு மீன் வளர்ப்பது.
வீட்டில் பூதொட்டிகள் இருக்கும் நீரை தினசரி மாற்ற வேண்டும் .இன்னமும் சுத்தமாக வைத்து கொள்ள விருபும்வோர் பூசெடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கலாம் . வசதியுள்ளவர்கள் சிறிய அளவில் வீட்டுக்காக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் உள்ளது.கொசு மருந்து திரவ கரைசலையும் ,வாயுவையும்  வாங்கி அதற்கான இயந்திரத்தில் இணைத்து  வீட்டை சுற்றிலும் பயன்படுத்தலாம் .இதையும் இயற்கையான முறையில் வேப்பபுண்ணாக்கையும்,சுண்ணாம்புக் கரைசலை பயன்படுத்தலாம் .மரக்கிளையில் இருக்கும்பொந்துகளில் மண் அல்லது சிமெண்ட் பூசி தண்ணீர் தேங்காதகுறைந்த விலையில் வங்கி அடமான சொத்துக்கள் வாங்க வேண்டுமாவாறு பார்த்து கொள்ளலாம் .
சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் வந்து வருடந்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மழைக் காலங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அதற்கு தனியாக ஒரு குழு உண்டு , இவர்கள் கொசுக்களின்  லார்வாவை  பிடித்து விட்டால் முதல் தடவை  20,000($500)ரூபாய்யும்,கட்டிட கட்டுமான தளமாக இருந்தால்  40,000($1000)ரூபாய்யும்,அடுத்தடுத்த முறைகளில் அபராதம் இரட்டிப்பாக உயர்ந்து கொண்டே போகும்.இதனால் தான் அங்கு மக்கள் சுகாதாரமாக வாழ்கிறார்கள். நல்ல வேளையாக இந்தியாவில் மழைக்காலம் மூன்று மாதம் மட்டுமே

Source:  https://redhilsrealestateagency.wordpress.com/

Saturday, October 15, 2016

தோல் நோய்களுக்கு மருந்து

உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்… மனிதனின் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும். அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலிப் பாதுகாப்பு அரண். உடலின் வெப்பத்தைச் சீராகவைத்திருப்பது, ‘விட்டமின் டி’-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது… எனப் பல வேலைகளை  செய்யும் உறுப்பு அது. அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்.



சரியான புரிதல் இல்லாமல் சில ஆயிரம் ஆண்டுகள் பெரும் மன உளைச்சலை உருவாக்கியது வெண்புள்ளி நோய். ‘ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ஒட்டுவாரொட்டியாகப் பரவாது, மரபணு மூலமாக தலைமுறைகளுக்குப் பரவாது, வேறு எந்தப் பக்க நோயையும் தராது’ எனத் தெளிவாகத் தெரிந்து, புரிந்துகொள்வதற்குள் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். நிறமிச்சத்து ஒன்றின் குறைவால் வெண்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது தெரியாமல், புரியாமல், சமூகத்தில் பலரை ஒதுக்கிவைக்கும் அவலம், உலகில் வேறு எங்கும் கிடையாது.
லேசான புள்ளிகளைத் தொடக்க நிலையில் அறிந்தவுடன், பூவரசம் பட்டையைக் (நாம் சிறுவயதில் பீப்பி செய்து விளையாடுவோமே அந்த இலைதரும் மரத்தின் பட்டையை) கஷாயமாக்கி 60 மில்லி வரை கொடுத்தால், இந்தப் புள்ளிகள் குறையும் என்கிறது ஆராய்ச்சி. ‘நோனி’ பழத்தின் நம்மூர் ரகமான நுணா மரம் (இன்னொரு பெயர் மஞ்சணத்தி) இலையை சட்னிபோல அரைத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படும் நுணா தைலத்தைத் தடவி வர இந்தப் புள்ளிகள் மறையும். இன்னொரு விஷயம், இந்தப் பயன் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. தவிரவும் இவை முழுமையாகக் குணப்படுத்தும் என்ற ஆதாரமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், இந்தச் சித்த மருந்துகள் எந்தவிதமான பக்கவிளைவும் தராதவை என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டவை. அருகில் உள்ள சித்த மருத்துவரின், அரசு மருத்துவரின் ஆலோசனைகளுடன் இவற்றை முயற்சிக்கலாம். கூடவே, இரும்புச்சத்துள்ள அத்தி, பேரீச்சைப் பழம் போன்றவற்றைச் சாப்பிடுவதும், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி முதலான புளிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
 
நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும் இதுபோன்ற தோல் நோய்களில், நோய் கொஞ்சம் ஆரம்பநிலையைத் தாண்டி அதிகரித்துவிட்டால், புள்ளிகளை முழுக்கத் துடைத்தெறிந்து குணப்படுத்தும் சாத்தியம் பல நேரங்களில் கிடையாது. ஆனால், முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தோல் நோயின் மேலாக வரும் நுண்கிருமித் தொற்று, மிக அதிகமான அரிப்பு, வைரஸால் வரும் அக்கி போன்றவற்றுக்கு, நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் நல்லது. இருதுறை மருத்துவர்களும் இணைந்து இதுபோன்ற நாள்பட்ட தோல் நோய்களுக்குச் சிகிச்சை செய்வது பாதுகாப்பானது மட்டும் அல்ல, குறைந்த காலத்தில், குறைந்த செலவில், நாள்பட்ட நோய்க் கூட்டத்தின் பிடியில் இருந்து நம்மை வெளியேறவும் உதவும்.
 
திடீர் தாக்குதலாகத் தடதடவென அரிப்பு வந்து, அரை மணி நேரத்தில் உதடு வீங்கி, கண் சுருக்கம் வந்து, உடம்பு எங்கும் திட்டுத்திட்டாகத் தடிப்பதை ‘அர்ட்டிகேரியா’ என்கிறார்கள். அதை தமிழ் மருத்துவம் ‘காணாக்கடி’ என்கிறது. கண்களால் பார்த்திராதபோது, எதுவோ ஒன்று கடித்ததால் ஏற்படும் சருமப் பிரச்னை என்பதால், அந்தப் பெயர். நோயை எதிர்க்க எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டிய வெள்ளையணுக்கள், ‘கூடுதல் அலெர்ட்’ ஆவதால் உண்டாகும் தொல்லை இது. ‘நாட்டின் எல்லைப் பகுதிப் புதரில் பதுங்கி ஓடும் பெருச்சாளியை, ‘யாரோ… எவரோ?’ எனப் பதறி ஒரு ராணுவ வீரர் ஏ.கே-47 வைத்துத் தடதடவெனச் சுட, ‘ஆஹா… எதிரி வந்துட்டான். அட்டாக்’ என மொத்த பட்டாலியனும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கும் நிகழ்வோடு காணாக்கடி நோயை ஒப்பிடலாம்.

ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள், அதிகப்பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது. எதுவுமே செய்யாவிட்டாலும், இரண்டு மணி நேரத்தில், ‘இப்படி ஒன்று இங்கே வந்ததா?’ எனத் தெரியாதபடி தோல் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும். சில நேரங்களில் இந்த அர்ட்டிகேரியா மூச்சுத்திண்றல், சிறுநீரகச் செயலிழப்பு வரைகூட கொண்டு சென்றுவிடும். அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான நவீன மருத்துவச் சிகிச்சைகளும் சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு. 
 
1 கைப்பிடி அருகம்புல், 2 வெற்றிலைகள், 4 மிளகுகள் சேர்த்து, கஷாயமாக்கி காலையில் சாப்பிடுவதும், மாலையில் சீந்தில் பொடியைச் சாப்பிடுவதும் ‘காணாக்கடி’யைக் காணாமல்போகச் செய்யும் எளிய வழிமுறைகள்.
தோலின் பணியும் பயனும் அறியாது, அதில் மேற்கத்திய முலாம் பூசி (அழகூட்டி என்ற பெயரில்) அதில் நாம் நடத்தும் வன்முறைகள், தோலையும் தாண்டி உட்சென்று தொல்லைகள் தருபவை. சூழலைச் சிதைப்பதில் முன்னணியில் உள்ள அழகூட்டி ரசாயனங்களில் பல, சூழலைச் சிதைப்பதற்கு முன்னர் நம் தோலையும் உடலையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
 
ஏறத்தாழ 80,000 ‘அழகுபடுத்திகள்’ உலகச் சந்தையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் போடும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் உண்டாக்கும் அபாயம் பற்றி, பெற்றோர்களுக்குத் தெரியாது. குளிக்காமல் கொள்ளாமல், கக்கத்தில் மணமூட்டி அடித்து கல்லூரிக்குக் கிளம்பும் இளசுக்கு, அதிலுள்ள ஃபார்மால்டிஹைடு, எத்திலீன் ஆக்ஸைடு வருங்காலத்தில் குழந்தைப் பேறுக்குத் தடை உண்டாக்கும் எனத் தெரியாது.
 
பின்னர் நள்ளிரவில் டி.வி முன்போ, அல்லது பிரபல குழந்தைப்பேறு மருத்துவர் முன்போ குத்தவைத்து உட்கார்ந்து குறிப்புகள் கேட்க வேண்டியதுதான். முகப் பூச்சுக்களில் இருக்கும் தாலேட், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன், சில வகை பிளாஸ்டிசைசர்ஸ், பாரபன்கள் (பெரும்பாலான க்ரீம், ஷாம்புக்களில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ் பொருள்), நிறமிகளுக்காகச் சேர்க்கப்படும் வண்ண நானோ துகள்கள்… இவை அனைத்தும் தோலின் இயற்கை அரணை உடைத்து உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, ‘அழகான நோயாளியை’ உருவாக்கக்கூடும் என்கிறது அறம் உள்ள மருத்துவ அறிவியல்!
 
வனப்பான தோல் இருக்க…
 
கறுப்பு நிறம்… அழகு மட்டும் அல்ல, ஆரோக்கியமும்கூட. அதை சிவப்பு நிறம் ஆக்குகிறேன் என முயற்சிப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.
 
தோல் உலராமல் வழவழப்பாக வைத்திருக்க உங்கள் அன்றாட மெனுவில், பப்பாளி, மாதுளை, சிவப்புக் கொய்யா, பன்னீர்த் திராட்சை, பெரிய நெல்லி இருந்தால் போதும். டேபிள் பெஞ்சுக்கு வார்னிஷ் அடிப்பதுபோல, தோலை பல ரசாயனங்களால் பட்டைத் தீட்ட வேண்டியது இல்லை.
 
பாசிப்பயறு மாவு, நலுங்கு மாவு தேய்த்துக் குளிப்பது, சோப்பு போல் தோலின் இயல்பான எண்ணெய்த்தன்மையைப் போக்காமல், வழவழப்புடன் வனப்பாக இருக்க உதவும்.
 
தோல் முற்றிலும் வறட்சி அடையாமல் இருக்க நல்லெண்ணெய்க் குளியல், காயத்திருமேனித் தைலக் குளியல் நல்லது. சிறுவயது முதலே இந்தப் பழக்கங்களைப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
 
தோசைமாவு, இயற்கையான புரோபயாட்டிக் சத்துள்ள கொண்ட ஒரு scrub. அதைக்கொண்டு முகத்தைக் கழுவி, தோலின் இறந்த செல்களை நீக்கி முகப் பொலிவு பெறலாம்.
 


MELASMA, BLEMISHNESS முதலான சாம்பல் நிற முகத் திட்டுகளுக்கு, முல்தானிமட்டியில் ஆவாரைப் பூ, ரோஜாப் பூ சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்ட அந்தக் கலவையை மோரில், அல்லது பன்னீரில் குழைத்துப் பூசி லு மணி நேரம் கழித்துக் கழுவலாம். திட்டுக்கள் மறையும்!
 


மருத்துவர்.கு.சிவராமன்

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...


கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.  கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளு வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.


 வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


இடுப்பு வலி குறைய சலபாசனம்


சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும்.



20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும்.
சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.

வைட்டமின் டி 

வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேர மாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள் வது நல்லது.

கர்ப்பப்பை கோளாறுகளுக்கு மருத்துவம்


மாதவிடாய்க்கு முன் கர்ப்பப் பையில் உள்ள ரத்தக் குழாய்கள் திறந்து கொள்ளும். ரத்தப் போக்கு ஆரம்பமாகும். 3 முதல் 5 நாட் களில் மாதவிடாய்  முடிந்ததும், கர்ப்பப் பை தசைகள் சுருங்கி, ரத்தக் குழாய்கள் மூடிக் கொள்ளும். இவை எல்லாவற்றையும் கட்டுப்ப டுத்துவது ஹார்மோன்கள்.

அந்த  ஹார்மோன்கள் சரியில்லை என்றால் அடி வயிற்று வலி வரும். அடுத்து கர்ப்பப் பையில் கட்டிகள்  இருந்தாலும் வலி வரும். கட்டி என்றதும்  புற்றுநோய் கட்டியோ என்று பயப்பட வேண்டாம். கர்ப்பப் பையின் உள்ளே இருக்கும்  தசையானது இறுகியிருக்கும். கர்ப்பப் பையானது சுருங்க, அந்தத்  தசைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

அதே போல கட்டி எந்தப் பக்கம் இருக்கிறதோ, அதைப் பொறுத்து வலியின் இடமும் மாறும். கீழே இருந்தால் அடிவயிற்றிலும், கர்ப் பப் பையின்  பின்புறம் இருந்தால் முதுகுவலியும் இருக்கலாம். அடினோமையோசிஸ் என்கிற பிரச்னை இருந்தாலும் வலிக்கும். கர்ப்பப்  பை புண்ணானதன்  விளைவாக, மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு துடிக்கிற அளவுக்கோ, மாதா மாதம் பிரசவ வலியை மிஞ் சும் அளவுக்கோ வலிக்கும். அடிக்கடி  டி அண்ட் சி செய்கிறவர்களுக்கும், வருடக் கணக்கில் காப்பர் டி உபயோகிப்பவர்களுக்கும்  அடினோமையோசிஸ் வரலாம்.

பூப்பெய்திய புதிதில் முதல் ஒரு வருடத்துக்கு அதிக வலி இருப்பது சகஜம். அதையும் தாண்டித் தொடர்ந்தாலோ, கட்டிக் கட்டியான  ரத்தப் போக்கு  இருந்தாலோ கர்ப்பப் பையில் பிரச்னைகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

மெனோபாஸ் வயதில் இருப்போருக்கு வரும் வலி அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப் பை கட்டியின் விளைவா கவும், அது புற்று நோயாக மாறியதன்  விளைவாகவும் அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் அதைக்  கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற வலிக்கு, உடனே நீங்களாக வலி நிவாரண மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. நிறைய திரவ  உணவுகள்  எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமும், சுகாதாரமும் முக்கியம். ரத்த சோகை இருந்தால் சரிப்படுத்தப்பட வேண்டும்.  நார்ச்சத்துள்ள காய்கறிகள்  மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கர்ப்பப்பை லேசாக இருப்பது போல உணரலாம்.

கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

  • மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.
  • ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.
  • வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.
  • உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
  • இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
  • முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.
  • உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
  • கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
  • மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.
  • சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
  • ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
  • எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
  • ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

Source:  http://www.tamil4health.com

 கடுகு எண்ணெய் + விளக்கெண்ணெய்

பனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும்.

இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகு எண்ணெய் + விளக்கெண்ணெய் இரண்டையும் சேர்த்து இரும்புக் கரண்டியில் சூடு பண்ணி அடிவயிற்றில் தேய்த்து வெந்நீரால் கழுவ, கருப்பை சுருங்கி விரிவது நார்மல் ஆகும்; வலியும் குறையும். 

கருப்பை கோளாறுகள் நீங்க


நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

வெந்தயம்

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

மணத்தக்காளிக் கீரை  சூப்

மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்

இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட வேண்டும்.

மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு 3 மாசத்துக்கு தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை காணாமல் போயிடும்.
இந்த சூப்ப சாதாரண நாட்கள்ள கூட மற்ற பெண்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தரும்.


வெள்ளைப்படுதல்


பெண்களுக்கு வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் புண், போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

  • கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.
  • அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
  • பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
  • கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
  • இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
  • பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
  • திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
  • ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
  • பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
  • சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
  • ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.
  • சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
  • விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.
  • தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
  • தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.
உணவுகள்  சேர்க்க வேண்டியவை:

தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.

தவிர்க்க வேண்டியவை:

மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.

 
பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.
கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல   மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.
தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.



பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

  • அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். 
  • கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். 
  • நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
  • வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். 
  • தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. 
  • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். 
  • எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பலாப்பழம்

மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.

நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.


சப்போட்டா பழம் 

சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு..  நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம்
பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27
மில்லிகிராம் பாஸ்பரசும்  உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும்,
சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத  கொழுப்பை குறைக்கும்.  இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும்
சப்போட்டா பழத்திற்கு உண்டு.


சீதாப்பழம்

சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும். இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும். பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம். சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம். எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது.


வர்மக்கலை

வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

  • அகத்தியர் வர்ம திறவுகோல் 
  • அகத்தியர் வர்ம கண்டி
  • அகத்தியர் ஊசி முறை வர்மம் 
  • அகத்தியர் வசி வர்மம் 
  • அகத்தியர் வர்ம கண்ணாடி 
  • அகத்தியர் வர்ம வரிசை 
  • அகத்தியர் மெய் தீண்டா கலை

ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என


 "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே"   என்ற வரிகள் விளக்குகின்றன
 

“தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

  • தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும் 
  • நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும் 
  • உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும் 
  • முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும் 
  • கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும் 
  • கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும் 
  • கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும் 
  • கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும் 
  • கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும் 
 
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள்

  • வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும். 
  • ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும். 
  • ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம். 

http://siddhabooks.com/varma-points 

மலர்களின் மருத்துவ குணங்கள்

இலுப்பைப் பூ:

இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.


ஆவாரம்பூ:

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


அகத்திப்பூ:

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.


மகிழம்பூ:

மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.


தாழம்பூ:

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.


செம்பருத்திப்பூ:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.


ரோஜாப்பூ:

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.


வேப்பம்பூ:

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.


முருங்கைப்பூ:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.


மல்லிகைப்பூ:

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

தேன்

01. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

02. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

04. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

05. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

06. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

07. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

08. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

09. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

20. என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும்
, ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுடர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.




Thursday, September 8, 2016

பூண்டின் மருத்துவக் குணங்கள்!!!


பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.





பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு பூண்டு


தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

Tuesday, August 9, 2016

சிறுநீரக நலன்

மாதுளம் பழம் (pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம் (Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம் (water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

ஆப்பிள் (Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

கரும்பு கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான்.


source:  http://thamil.co.uk/?p=678

Thursday, August 4, 2016

முடக்கறுத்தான் கீரை

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”  – சித்தர் பாடல்

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.


முடக்கற்றான் இரசம்


ஒரு கை பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

முடக்கத்தான் தோசை

 
தேவையான பொருட்கள்
 
புழுங்கல் அரிசி – 1 கப்
முடக்கத்தான் இலை – 2 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை
 
அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும். மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம். மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும். இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி இரண்டுமே நன்றாக இருக்கும்.


 முடக்கத்தான் கீரை இட்லி


தேவையானவை:
 
இட்லி அரிசி – 3 கப், முழு உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப், வாழை இலை – 1, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

செய்முறை:
 
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து–வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை அகலமாக கொஞ்சம் தடிப்பாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.

 

 முடக்கத்தான் கீரை மருத்துவம்

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.

இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டுவர காதுவலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடிநீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர்பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்து குறிப்பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப்படி குடிநீர் அருந்திவர நாள்பட்ட மூலநோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது. இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.

கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.

இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.

இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.

முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கு முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.

இதன் இலைகள் மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.

இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரைதோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


Thursday, July 14, 2016

கனவுப் பள்ளி


ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்ற  கனவை ஆவணப்படுத்தி அனைவாிடமும் இந்த வலைப்பூ மூலம் பகிா்ந்து கொள்கிறேன். 

கனவுப்பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதோடு அதற்கான பாடங்களை தொகுத்தளிக்க உள்ளேன்.  அந்தப்பாடங்ள் கனவுப் பள்ளிக்கான பாடங்களாக மட்டுமின்றி உடனடியாக தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.  அவா்கள் எந்த பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தாலும் அவா்களுக்கும் உங்களுக்கும் உதவுமாறு இருக்கும்.

கல்வி என்றால் என்ன?

தன்னை அறிவதே கல்வி.

தன்னை அறிவது என்றால் தன் வலிமையை, தன் இயல்பை, தன் வாழ்வின் நோக்கத்தை, வாழ்வின் அருமையை, தான் வாழும் உலகையும், தன்னோடு வாழும் மனிதா்கள் மற்ற உயிாினங்களின்  அருமையையும் அறிவதே கல்வி.


 கல்வி முறை


கல்வியில் பயில வேண்டியவை  கற்றல், செயல்முறை மற்றும் கற்பிக்கும் திறன். 
  • எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்?
  • எப்படி செயல் புாிய வேண்டும்?
  • எப்படி கற்பிக்க வேண்டும்?
இவற்றையே  ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்கால கல்விமுறை


கீழ்படிந்த உதவியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் படை வீரர்கள் போன்றோரை உருவாக்க வடிவமைக்கப்பட்டது ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி. எனவேதான், பள்ளி கல்விகளில் படைப்புத்திறன்  முற்றிலும் தவிர்க்கப்பட்டது. 

கீழ்படிந்த, கேள்வி கேட்காமல் ஒரே பணியை திரும்ப திரும்ப செய்யும் நபர்களுக்கான தேவை தொழில்நுட்பத்தின் காரணமாக குறைந்து வருகிறது. 

ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதான கல்விதான் நமக்குத் தேவை. தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது என்கிறாா் விவேகானந்தா்.

நமக்குத் தேவையானது ஆளுபவா்களுக்கான கல்வி முறை.  அடிமைகளுக்கான கல்விமுறை வேண்டாம்.

 நல்ல பள்ளி

  • ஆசிாியா் - நல்லவற்றை கற்பிக்கும் அனைவருமே ஆசிாியா்.  மாணவா்களோடு தொடா்பு கொள்ளும் ஒவ்வொருவரையுமே ஆசிாியராக கருதி அவா்கள் நல்லவற்றையே கற்பிக்கிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நல்ல ஆசிாியா்களை இனங்காண மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவா்களே ஆசிாியா்களை தோ்ந்தெடுக்க பயில வேண்டும். ஆசிாியா் வழிகாட்டியாக, நண்பராக, நல்ல முன்மாதிாியாக மாணவா்களால் மதிக்கப்படுவாா்.  அத்தகைய ஆசிாியா்களை மாணவா்களே தெய்வமாக மதிப்பா்.  அத்தகைய ஆசிாியா்களை உருவாக்குவதுதான் நல்ல கல்வி முறையின் மிக முக்கியமான தேவை.  ஆசிாியா்கள் கற்பிக்கும் பாடத்தில் பட்டறிவு கொண்டவா்களாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஆசிாியருக்கு புத்தரைப்போல மரத்தடியே போதுமானது. 
  • பள்ளி  -  இயற்கையான சூழலில் இருக்க வேண்டும்.  இயற்கையை உற்று நோக்க ஏற்றதாக இருக்க வேண்டும்.  ஆசிாியா்களும் மாணவா்களும் ஒன்று கூடும் இடமாக இருக்க வேண்டும்.  பயணம் செய்வது பாடத்திட்டத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.  ஊரையும் உலகையும் சுற்றி வந்து கற்பதாக இருக்க வேண்டும்.
  • வகுப்பறை  -  மழைக்கு ஒதுங்கும் அளவிலும் ஓய்வெடுப்பதற்காகவும்,  இருந்தால் போதும்.
  • பாடத்திட்டம் - மாற்றத்தக்கதாகவும் மாணவா்களின் விருப்பத்திற்கு ஏற்றதாகவும் வாழ்க்கையில் உடனடியாக பயன் தரத்தக்கதாவும் இருக்க வேண்டும்.  உடலையும் மனதையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.  ஞானத்தையும் (common sense), அறிவையும் (Knowledge), திறனையும் வளா்ப்பதாக இருக்க வேண்டும்.
  • தோ்வும் திறனாய்வும்  -  மாணவா்களே தங்களை திறனாய்வு செய்து கொள்ளவும், மற்ற மாணவா்களை திறனாய்வு செய்யக்கூடியதாகவும், பெற்றோா் மற்றும் சமூகம் திறனாய்வு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.  ஆசிாியா்கள் திறனாய்வு செய்வது என்பது உற்பத்தி செய்பவனே தரத்திற்கு சான்றளிப்பது போன்றதாகும்.
வாசித்தல், கேட்டல், எழுதுதல், பேசுதலுக்கு  அடிப்படைக்கல்வி ஐந்தாண்டுகளே போதுமானது.  அதன் உதவியோடு அவா்களே கற்றுக் கொள்ளும் திறன் வளா்க்க வேண்டும்.  ஐந்து வயதுக்குள் அவா்களே சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் நாம் இருபது வயதானாலும் அவா்களே கற்றுக் கொள்ள கற்பிப்பதில்லை.
கற்றல் என்பது தானே விருப்பத்துடன் செய்ய வேண்டியது என்பதையும்  வாழ்நாளெல்லாம் தொடா்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டியது என்பதையுமே கற்பிக்க வேண்டும்.

அறிய வேண்டியவை அறிவு

  • பிரபஞ்சம்
  • பிரபஞ்ச சக்திகள்
  • உலகம்
  • உயிா்
  • மனம்
  • உடல்
  • தொழில்நுட்பம்
  • விவசாயம்
  • சுற்றுச்சூழல்
  • வியாபாரம் 
  • கணிதம்
  • வரலாறு
  • சமூகம்
  • அரசியல்
  • மனோதத்துவம்
  • தத்துவம்
  • சட்டம்
  • பொருளாதாரம்
இவற்றில் அடிப்படையோடு மாணவா்களுக்கு எதெல்லாம் விருப்பமோ அத்தனையையும் கற்பிக்கும் வசதி.  இன்றைய தொழில்நுட்ப உதவியோடு ஆயிரக்கணக்கான பாடங்களை படிக்கும் வசதி உள்ளது.  எனவே பாடங்களுக்கு எல்லையே இல்லை. 

பயில வேண்டிய திறன்கள்

  •  படைப்புத்திறன்
  • நினைவாற்றல்
  • கணிதத்திறன்
  • மொழியாற்றல்
  • ஆளுமைத்திறன்
  • மலையேற்றம்
  • குதிரையேற்றம்
  • நீச்சல்
  • நீா், நில, வான் ஊா்திகள் இயக்கும் திறன்
  • கூா்ந்து கவனிக்கும் திறன்
  • தாவரங்களை அறியும் திறன்
  • பறவைகளை அறியும் திறன் 
  • விலங்குகளை கவனிக்கும் திறன்
  • தற்காப்புக் கலை
  • நடனம்
  • முதலுதவி
  • குணப்படுத்தும் கலை  (Healing)
  • உடற்பயிற்சி
  • தியானம்
  • ஆராய்ச்சி செய்யும் திறன்
  • தலைமைப் பண்புகள்
  • பேச்சாற்றல்
  • நடிப்பு
எல்லா திறன்களையும் ஒருவரே பெறுவது என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல.  திறன்கள் மாணவா்களது விருப்பத்தையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் அவா்களது கனவையும் அடிப்படையாகக் கொண்டது.  

பதின்மூன்று வயதுக்குள் மாணவா்களது கனவையும் நோக்கத்தையும் உறுதியாக உணா்ந்து கொண்டால் தேவையான திறன்களை அவா்களே வளா்த்துக் கொண்டு பதினெட்டு வயதில் அவா்கள் வாழ்வை எதிா்கொள்ள உண்மையிலேயே வளா்ந்தவா்கள் ஆவாா்கள்.  எனவே பதின்மூன்று வயதிற்குள் அவா்களது வாழ்க்கையின்  பாதையை தோ்ந்தெடுக்க வழிகாட்டுதல் வேண்டும்.  அதன் அடிப்படையில் அவா்களுக்குத் தேவையான திறன்களை தோ்ந்தெடுத்து பயில வேண்டும்.

Monday, June 27, 2016

மனநோய் மருந்துகள்

மனநோய்களுக்கான மாற்று மருந்துகளையும், மனநோய் குறித்த தகவல்களையும், நோயாளிகளின் குடும்பத்திற்கு உதவக்கூடிய தகவல்களையும் இணையத்திலிருந்து தொகுத்து  இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

மனநோய்க்ககான ஆங்கில மருந்துகளுக்கு மாற்று மருந்து தேடுபவா்களுக்கு இந்த பக்கம் உதவும்.  இது குறித்த தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நோய் என்றால் என்ன?


நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன

சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனநோய்) மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.


மனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தமானவை. 

மனக்கோளாறுகள்


மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.

மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.
  1. கடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.
  2. பொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).
மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:
  • மறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer's disease) முக்கியமானது
  • தவறான மது பாவனை (alcohol abuse)
  • போதைப் பழக்கம் (drug abuse),
  • உளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).
 மனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆடிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).



மனக்கோளாறுகளைக் கண்டறிதல் (diagnosis)

 
மனக்கோளாறுகளைக் கண்டறிய புதிய, தொழில்நுட்ப உபகரணங்களாகிய சி.டி ஸ்கேன் (CT scan ), எம். ஆர். ஐ. ஸ்கேன் (MRI scan) போன்ற சோதனைகள் உதவுவது இல்லை. 

மனக்கோளாறுகளைக் கண்டறிய உரிய பயிற்சி, அனுபவம், கூரிய அறிவும் திறமையும் கொண்ட சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவா்களால் மட்டுமே முடியும்.

சிகிச்சை முறைகள்

முப்பரிமாண - உயிரியல், உளவியல், சமூகவியல் - அணுகுமுறையே (bio-psycho-social approach)  மனநோய் சிகிச்சையில் பின்பற்றப் படுகிறது.

மனச்சோர்வு நீக்கி மருந்துகள் (antidepressants), உளப் பிறழ்வு எதிர்ப்பு மருந்துகள் (antipsychotics) , பதற்றம் நீக்கி மருந்துகள் (antianxiolytics) மிந்தூண்டல் சிகிச்சை (ECT, electroconvulsive therapy) ஆகியவை மனக்கோளாறின் குறிகுணங்களை கணிசமான அளவு குறைக்கும்.  இவை நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளப்பட வேண்டும்.  இவை முற்றிலும் குணமாக்குவது இல்லை.   மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தும்.  எனவே இவற்றிற்கு மாற்று மருந்துகளைத் இணையத்திலிருந்து தொகுத்து  இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறை மனநோயிற்கு கண்டுபிடித்திருக்கும் அதிகபடியான மருந்து உறங்க வைத்தலும் மூளை நரம்புகளை தளர வைத்தலும் தான். இம் மருந்துகளால் சுகம்பெற்று வந்தவர்களை விட வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களே அதிகம். கடவுளின் கருணையும் மனிதனின் அன்பு மட்டுமே மன நோயை தீர்க்கும் மருந்தாக அன்றுமுதல் இன்றுவரை இருந்து வருகிறது. 
ஆனால் ஒரு மனநோயாளியை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது மிகவும் கடினம். அக்கம் பக்கத்தாரின் கேலியும், கிண்டலும் தொல்லையும், புகார்களும் ஒருபுறம் என்றால், குடும்ப நபர்களின் சலிப்பும், அலுப்பும் இன்னொருபுறம். இதை நோயாளியின் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் எதிர்கொள்வது என்பதோ மிகப்பெரிய சவால்.

மேலும் விபரங்களுக்கு விக்கிபீடியா



மனக்கோளாறுக்கான மருந்துகள் 

 

வெண்பூசணி

  • பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப் பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க, புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக் காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகிறது.
  • ரத்தச் சுத்திக்கு, ரத்தக் கசிவு நீங்க, வலிப்பு நோய் சீராக, குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்த வெண் பூசணி பயன்படுத்தப்படுகிறது.

 

மருதா‌ணி

கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

 

மாதுளைச் சாறு

 அதிக மன அழுத்தமும் மன உளைச்சலும் உள்ளதா? நீங்கள் மன நோயாளி ஆகாமல் இருக்க, நம் பாரம்பரியம் சொன்ன எளிய பரிந்துரை மாதுளைச் சாறு.


அதிமதுரம்

அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
  • அதிமதுரம், திராட்சை ஆகிய இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 முதல் 100 கிராம் எடுத்துத் தண்ணீரில் அரைத்துப் பாலில் கலக்கி சாப்பிட்டுவந்தால், மனப் பரபரப்பு மட்டுப்படும்.
  • அதிமதுரம், சோம்பு, சர்க்கரை ஆகியவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்றாகச் சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், மனப் பாரத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி நீங்கும். 

 

அகத்திக்கீரை

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.



கொத்துமல்லிக் கீரை

கீரைகளுள் இரும்புச்சத்தும், தாது உப்புகளும், வைட்டமின் ‘சி’யும் அதிக அளவில் உள்ள கீரை கொத்துமல்லிக் கீரைதான்!  இதனை உண்பதால் மூளையில் ஏற்படும் சூடும், மன அழுத்தமும் நீங்குகிறது. நிம்மதியான தூக்கமும் இரவில் கிடைக்கிறது. நன்கு பசி எடுத்துக் சாப்பிட முடியும்.
பைத்தியம் அல்லது மனநோய் நீங்க 100 கிராம் கீரையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதை 200 மில்லி பசும்பாலில் கரைக்க வேண்டும். பிறகு அந்தப் பசுப்பாலை வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தச் செய்ய வேண்டும். தினமும் இருவேளை இதுபோல் அருந்தச் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்கு இது போல் அருந்தினால் பலன் கிடைக்கும். அதன் பிறகு நோயாளியின் தன்மைக்கு ஏற்ப கீரையின் அளவைக் குறைத்து இந்த முறையில் பால் தயாரித்துக் கொடுக்கலாம்.

முருங்கை வோ்

பூச்சி புழுக்கள் இருந்தாலே ஒரு சிலா் மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள், ஒரு சிலர் இதனை மனநோய் என்று நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும். அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். 

வல்லாரை இலை.


அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்த வும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும். 

தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன. மனநோய்க்கு மா மருந்து !

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது.


வில்வ இலை


மனநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இலைகளை மென்று உண்பது நல்லது.


நாயுருவி வோ்


 நாயுருவி வேரை வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள். 


சர்ப்பகந்தி


வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.
 

நித்யகல்யாணி 


நித்ய கல்யாணி பூக்களை பறித்து தினந்தோறும் முகர்ந்து, இதன் குடிநீரை 30 மிலி அளவில் நீண்ட நாட்கள் குடித்து வந்தால் மனநோய்கள் தீரும்.


 சங்கு புஷ்பம்


சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் அந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.    இவற்றில் சமானன் வாயு என்பது உடம்பில் நடுப்பகுதியில் உள்ளது. உணவை செரிக்க உதவுவதுதான் சமானன் வாயுவின் முக்கியப் பணியாகும். இந்தப் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன்மூலம் உடல்நலம் குன்றுகிறது. இத்தகைய பாதிப்பை சரி செய்யக்கூடிய மருத்துவ ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.

அதுதவிர மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து சங்கு புஷ்பக் கொடி மனிதர்களை பாதுகாக்கிறது. இப்படி சிறப்புகளை பெற்றுத் திகழும் சங்கு புஷ்பக் கொடி காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சங்கு புஷ்பம் கொடியாக வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளரும்.
ஆயுள் வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

நீர் பிரம்மி

நீர் பிரம்மி நரம்பு டானிக்காக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு நோய் மற்றும் மனநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.


பப்பாளி


மூளைக்கு சக்தியுட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உள்ளதால் மன அழுத்தம் உடையவர்கள் பப்பாளி பழத்தை தினசரி சாப்பிடலாம், மூன்று வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் மனநோய் குணமடையும்.

எலுமிச்சை

மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பழத்தை தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க  வைக்கவேண்டும்.

தொடர்ந்து 12 நாட்கள் பழச்சாற்றில் ஊறவைத்த சீரக சூரணத்தை கொடுத்து வரவேண்டும். பின்பு மீண்டும்  12 நாட்கள் குளிக்க வைத்து சூரணம்  தரவேண்டும்.

இதுபோல் 4முறை (48) நாட்கள் கொடுத்து வந்தால்  முழுவதும்  மனநோய் குணமடையும்.

  பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும்.
பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்



சித்த வைத்தியம்

அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. 

கிரிகை நூல் 

 
கிறுக்கு என்பதுபைத்தியம் அல்லது மனநோய் என்றும் கொள்ளலாம். மனநோய்க்குரிய மருத்துவ நூலாக அமைவதுகிரிகை60 என்றும்நூலாகும். நோயின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு 18 வகைப்படுமென்று கணித்துள்ளனர்.

                        “ஆமடா கிரிகையது பதினெட்டுந்தான்
                                    அப்பனே மனுக்களுக்குப் பிடிக்குங்காலம்
                        தாமடா  துட்டகண பூதமென்பார்
                                    தப்பாதே யெச்சியதைத் தொடர்பேயென்பார்
                        வேமடா சாத்திரங்கள் அறியாமட்டை
                                    வீணாகப் புலம்புவதால் வருவதேது?
                        நாமடா அதனுடைய குணங்கள் கண்டு
                                    நன்றாக உனக்கறியச் சொல்வோம்பாரே!”
-       (கிரிகை நூல் – 64. செய்.2)

அணர் கிரிகை, பித்தக் கிரிகை, எச்சில் கிரிகை, வாதக் கிரிகை, ஐயக் கிரிகை, நாதவிந்துக் கிரிகை, பூதக்கிரிகை, நீர்க் கிரிகை, கல்லெரிக் கிரிகை, கும்பிடு கிரிகை, முணங்கக் கிரிகை, அலற் கிரிகை, மருட்டுக் கிரிகை, மூடு கிரிகை, வலிக் கிரிகை, பேய்க் கிரிகை எனப் பதினெட்டு வகையாக அறியப்பட்டுள்ளது

மனநோய் தோன்றக்காரணம் பூத கணங்கள் என்றும், எச்சினி என்றும்,தேவதை என்றும் கூறுவர்.அவ்வாறு கூறுபவர்களெல்லாம், மன நோயின்சாத்திரங்களை அறியாத மட்டைகள். மனநோயின் வகைகளைக் கூறுகிறேன். அவற்றை அறிந்து,அவற்றுக்குரிய மருந்தைக்கொடுத்து குணம் பெறச் செய்வீர் என்று கேட்டுக் கொள்ளும் முறையில் இந்நூல்அமைந்திருக்கிறது.

 


 அக்குபஞ்சர்


மணிக்கட்டு ரேகையில் சுண்டு விரல் நேராக வெளிப்பக்க பள்ளத்தில் உள்ள அக்கு புள்ளியை தினமும் 7,14 முறை இரு கைகளிலும் அழுத்துவதால் இதய படபடப்பு, நெஞ்சுவலி, மனநோய் குணமாகும். இப்புள்ளி மனதை அமைதிப்படுத்தி சாந்தமாக்கும். அதிக கோபம், உணர்ச்சி வசப்படும்போது இதை அழுத்துவதால் நம்மை கட்டுப்படுத்தலாம். காரணமின்றி அழும் குழந்தை கூட இதை அழுத்துவதால் சமாதான மாகும். 



ஆயுா்வேதம்




 




Natural home remedy using cardamom powder:


1. Take 1 glass hot water
2. Add 1 tsp cardamom powder
3. Mix well
4. Leave it for 10 min
5. Sieve the mixture
6. Drink while lukewarm

Natural home remedy using licorice powder:


1. Take 2 tsp licorice powder
2. Add 200 ml water
3. Boil it till the water reduces to half
4. Strain the mixture
5. Consume the water when lukewarm, first thing every morning

Tips:

Fish promotes good brain health
Aromatherapy helps reduce depression and anxiety





மனதைச் சார்ந்த ரஜஸ் மற்றும் தமஸ் எனும் இரு தோஷங்களின் ஆதிக்கத்தினால் மனச்சிதைவு நோய் ஏற்படக் கூடும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவற்றின் ஆதிக்கம், உடலைச் சார்ந்த வாத, பித்த, கப தோஷங்களையும் சீற்றமுறச் செய்யும்  என அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

பிராம்மீ கிருதம் - கல்யாணக கிருதம் - மஹா கல்யாணக கிருதம் போன்ற நெய் மருந்துகளில் ஒன்றை மட்டும் சிறுகச் சிறுகப் பருகச் செய்து, அம்மருந்தின் பூரண வரவை உடல் ஏற்றதும், அதற்கான குறிகளை வெளிப்படுத்தும். அதன் பிறகு, பாதிக்கப்பட்டவரை ஒரு பெரிய பெட்டியில் உட்கார வைத்து, மூலிகை இலை, தழை, வேர்களால் கொதிக்கவிட்ட நீராவியைச் செலுத்தி வியர்வையை வரவழைத்து, பின்னர் வாந்தி, பேதி சிகிச்சை முறைகளைச் செய்து குடலைச் சுத்தம் செய்வர். பஸ்தி எனும் எனிமா முறை, நசியம் எனும் மூக்கிலிடும் மருந்து ஆகியவற்றையும் பிரயோகிக்க வேண்டும். இந்த சிகிச்சைகளின் மூலம் மனம் தெளிவடையும்.

இவ்வாறு சிகிச்சை செய்வித்தும் நோய் தொடர்ந்து இருந்தால், ஊடுருவிச் செல்லும் நசிய மருந்துகளையும், கண்ணில் இடும் மருந்துகள் கலந்த கண் மை பிரயோகங்களையும் செய்ய வேண்டி வரும். மேலும் சந்தோஷமுண்டாக்குதல், ஆறுதல் கூறுதல், கலங்கச் செய்தல், பயமுண்டாக்குதல், அதட்டுதல் போன்ற வைத்திய முறைகளும், எண்ணெய்த் தேய்ப்பு, மூலிகைப் பொடியைத் தேய்த்தல், புகையிடுதல், மூலிகை நெய் பருகுதல் போன்றவற்றாலும், குடல் சுத்திமுறைகளைச் செய்வதாலும் மனதை சுயநிலைக்குக் கொண்டு வரலாம்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சைமுறைகள் உத்தமமானவை. சாதாரணமாக வெளிநோயாளியாக இருந்து கொண்டு சிகிச்சை செய்து கொள்ளக் கூடிய மனச் சிதைவு நோய்க்கான மருந்துகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன. ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் சாப்பிட வேண்டிய நிர்பந்தமுண்டு. அவை அனைத்தும் நபருக்கு நபர் வேறுபடும் என்பதால் நீங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இதற்கான தீர்வைப் பெறலாம். 

தலைக்குத் தேய்த்துக் கொள்ளக்கூடிய பிரம்மீதைலம், திரிபலா தைலம் போன்றவற்றின் தொடர் உபயோகத்தாலும் உங்களுக்கு மன அமைதி ஏற்படலாம். சங்கு புஷ்பம், ஜடாமாஞ்சி, வல்லாரை, வசம்பு, அதிமதுரம், பிரம்மீ, சீமக் கொட்டம், திப்பிலி, வாலுளுவை போன்ற மனச்சிதைவை நீக்கும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருந்துகளை உள்ளடக்கிய டானிக் மருந்துகள், மாத்திரைகள் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளன.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
First Published: Jul 24,

Source:  http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article767455.ece?service=print 



  Home Remedies for Schizophrenia

1. Asian Ginseng

This herb is a kind of natural antioxidant and its neuro protective properties helps in the protection of the brain. It is used in the treatment of different types of brain disorder, including Schizophrenia. Those suffering from Schizophrenia must have herbal tea prepared from a teaspoon of dried and powdered Asian Ginseng twice daily. To make the tea, take one teaspoon of dried and powdered Asian Ginseng and boil it in one glass of water for around ten minutes. Strain the solution and allow it to cool before drinking it. This rememdy must be followed for about six months in order to get relief from various symptoms of schizophrenia.

2. Green Cardamom

The seeds of green cardamom can also be used to control the various symptoms of Schizophrenia. Green cardamom seeds have got healing properties as well as it can be very good for the nervous system. The best way to use green cardamom seeds in the treatment of schizophrenia is to make herbal tea. For this remedy take one glass of hot water and add one teaspoon of cardamom powder to it. Mix it properly and leave for around ten minutes. Strain the mixture, add some sugar and drink it while lukewarm. Drink this tea twice a day to control Schizophrenia symptoms.

3. Licorice Powder

Licorice has got minerals and compounds that can help in controlling and managing the brain condition. This herb is very effective in controlling anxiety and stress. The healing properties of licorice can be successfully used in the treatment of schizophrenia. Take one teaspoon of licorice and steep it in hot water for ten to fifteen minutes. Strain the solution and drink it. For better result, drink this solution on an empty stomach in the morning. It is advisable to have breakfast after one hour so that the herb gets properly digested and absorbed into the blood stream.

4. Basil Leaves

Basil leaves has got healing as well as antioxidant properties which can be used for treating various brain disorders including schizophrenia. Regularly drinking tea prepared with Basil leaves can promote brain functionality and thus help in controlling the symptoms associated with schizophrenia. To make this herbal tea, add a quarter teaspoon of basil leaves and half a teaspoon of sage in a cup of boiling water. Allow it to steep for few minutes and then strain the solution and drink the tea. Try to drink this herbal tea twice daily to notice positive improvements within a short period of time.

5. Indian Gooseberry

Indian gooseberry is a kind of natural antioxidant. It also boosts the immune system thus giving the body the much needed energy to fight against mental disorders like schizophrenia. Also the high amount of Vitamin C and niacin amide present in Indian gooseberry help a lot. Those suffering from this mental problem must eat two to three Indian gooseberries daily for at least a month. Another option is to take the dried leaves of Indian Gooseberry and grind them to make a smooth powder. Take one teaspoon of this powder with hot water two times a day to treat the condition.

6. Cold Water Fish

Fish promotes good brain health and functionality. So those suffering from schizophrenia must eat fish on regular basis. Especially by eating cold water fish, your body will get omega-3 and 6 fatty acids which are polyunsaturated fats. Omega 3 fatty acids are highly beneficial for treating schizophrenia and when cold water fish is consumed daily there will be huge reduction in the symptoms associated with schizophrenia. Try to include cold water fish like salmon, steelhead, trout, goldfish and koi in your diet plan. Those who do not like to eat fish can take fish oil as a dietary supplement.

7. Ginkgo Biloba

This is a kind of herb that can improve brain circulation, memory and other mental functions. It can also help to get rid of headaches, fatigue and mood swings. People suffering from chronic schizophrenia, should use ginkgo biloba to treat the positive symptoms of schizophrenia. This herb must be consumed in tea form and for positive results you must drink three cups of the tea every day. When this herbal tea is consumed, the levels of oxygen reaching the brain is increased which can greatly calm down a patient.

8. St John’s Wort

St. John’s wort is one of the most popular natural medicines for the treatment of various symptoms of schizophrenia. The excitement and tension accumulated in a person suffering from schizophrenia can be calmed and relaxed by using the St. John’s wort herb. This herb also improves mood and relieves anxiety, fear, nervousness and depression. Everyday take one tablespoon of the juice of the St. John’s wort herb to control the symptoms of this mental disease.

9. Carrot

Carrot is one of the vegetables that a person suffering from schizophrenia must consume daily. Carrots are rich in niacin which helps a lot in the treatment of different brain disorders. Just eat one to two carrots in raw form daily. The best option is to make a salad of fresh carrots and eat it with your dinner or lunch. Another option is two take three medium sized carrots and little spinach leaves, blend both the ingredients properly with the help of little water. Now drink this healthy juice daily. Other popular niacin enriched foods are corn, fish, potatoes, whole white wheat and potatoes.

10. Chamomile

Chamomile has got essential minerals and compounds along with soothing and calming properties which help a lot in the treatment of schizophrenia. Chamomile can be used as a mood enhancer, or to promote restful sleep for those suffering from schizophrenia. Take one teaspoon of chamomile in powered form and add it in one cup of boiling water. Allow it to steep for ten minutes and then strain it before drinking it. Try to drink this tea daily until the symptoms associated with schizophrenia are under control.

To conclude, with the help of the above mentioned natural remedies one can minimize the effects of schizophrenia and increase the potential to enjoy life. However, it is very essential to follow the medicines and therapies suggested by a doctor when it comes to the treatment of schizophrenia.